12.30.2009

நகைக்க சில காமடி துணுக்குகள் !!!!

நகைக்க சில காமடி துணுக்குகள் :)




உங்களுடைய பையனைக் கொஞ்சம் கண்டிச்சு வையுங்க சார்!’’

‘’ஏன்?’’

இந்தியாவின் தேசிய பறவை எதுன்னா ‘கொசு’ என்கிறானே?’’
>குலசை நஜ்முதீன்

***************************************************************

‘’எப்பலேர்ந்து உங்களுக்கும்,உங்க மனைவிக்கும்
கருத்து வேறுபாடு ஆரம்பிச்சது…?’’

‘’கல்யாணத்திலேர்ந்து…வக்கீல் சார்!’’
>ஆனந்த சீனுவாசன்

****************************************************************

‘’நம்ம தலைவரோட நாய்க்கு மோப்ப சக்தி அதிகம்!’’

‘’அப்படியா!’’

‘’ஆமாம்.லஞ்சம் கொடுக்க வர்றவங்களை கண்டு பிடிச்சி
வாலாட்டுமே!’’
>திருத்துறைப்பூண்டி சேகர்

****************************************************************

‘’பெனசில்ல ஆட்டோகிராப் போடணும்னு சொல்றிங்களே …ஏன்?’’

‘உங்க புகழ் மங்கும்போது அழிச்சுக்கலாம் பாருங்க!’’
ஜே.தனலட்சுமி

**********************************************************

நன்றி கல்கி 08-02-09

*****************************************************************************

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு, கொய்யால சிம்பு படத்த பாத்தா அப்பவே சாவு

-'பொல்லாதவன்' சங்கம்
----------------------------------------------

நிருபர்: நீ நடிக்க வரலேன்னா என்னவாயிருப்பீங்க?

விஜய்: ஐ ஏ ஸ் ஆகிருப்பேன்.

நிருபர்: அதான் நடிக்க தான் வரலேயே, ஏன் இன்னும் ஐ ஏ ஸ் ஆகாம இருக்கீங்க?

--------------------------------------------

வடிவேலுவின் தங்கச்சி:ஏன் அண்ணா சோகமா இருக்கீங்க?

வடிவேலு: வரும்போது ஒரு நாதாரி பய குருவி பட டிக்கேட் ஓசில தந்தான். சரினு போனா போகுதுனு மூனு மணி நேரம் தெனர தெனர பாத்தேன்.. அதான்

தங்கச்சி: ஓடி வந்துருக்கலாமே?

வடிவேலு:படம் பாக்கும்போது ஒருத்தன் சொன்னா இவன் 'விஜய்' படம் பாக்க வந்துருக்கான் இவன் ரொம்ப 'தைரியசாலி'னு சொல்லிட்டாமா!!... நானும் எவ்வளவு நேரம் தான் படம் பாக்குற மாதிரியே நடிக்குறது?

**********************************************

Δεν υπάρχουν σχόλια: