12.28.2009

மருத்துவர் காமடி




"இன்னைக்கு உங்களுக்கு ஆபரேஷன்?"
"போங்க டாக்டர், இன்னைக்குதான் நர்ஸ் சிரிச்சு, சிரிச்சு பேசினாங்க. இப்படி சொல்லி என்னை கஷ்டப்படுத்துறீங்களே!"


டாக்டர் எனக்கு 3 மாதமா கடுமையான இருமல்"
"அப்படியா? சும்மாவா இருந்தீங்க."
"இல்ல டாக்டர் இருமிகிட்டேதான் இருந்தேன்."


"டாக்டர் இந்த ஆபரேஷன்ல நான் பிழைச்சிடுவேனா?"
"அது தெரியாது, ஆனா கடன் தொல்லையில இருந்து நான் பிழைச்சிடுவேன்!"


டாக்டர்: உடம்புக்கு ஆயிரம் வியாதி வரத்தான் செய்யும் அதுக்காக இப்படி பயந்தா எப்படி?
நோயாளி: நான் பயப்படறது நோய்க்கு இல்ல டாக்டர். உங்களுக்கு தான்.


என்ன டாக்டர் எனக்கு மூணு தடவை ஆபரேஷன் பண்ணிட்டீங்களா?"
"யோவ் மூணு தடவை மயக்க மருந்து கொடுத்தேன். கொடுத்த 5 நிமிஷத்துல எந்திரிச்சுகிட்டு இதே கேள்வியை கேட்டுக்கிட்டிருக்கே."



"அந்த டாக்டர் மத்தவங்களைத் திட்டும்போது அடிக்கடி 'எலும்பை' எண்ணிடுவேன்னு சொல்றாரே, ஏன் அப்படி?"
"அவர் எலும்பு நோய் நிபுணராச்சே அதான்!"


"டாக்டர், எனக்கு காலையிலேர்ந்து உடம்பெல்லாம் அரிக்குது!"
"எனக்கு காலையிலேர்ந்து கை அரிக்குது, அது உங்களாலே எனக்கு வருமானம் வர்றதுக்குத்தானா?"


"டாக்டர், நான் என்ன சாப்பிட்டாலும் என் உடம்பிலே ஒட்டமாட்டேங்குது!"
"அப்படியா! தினமும் ஒரு பாட்டில் கோந்து சாப்பிடுங்க உடம்பிலே ஒட்டும்!"

Δεν υπάρχουν σχόλια: