12.30.2009

நகைக்க சில காமடி துணுக்குகள் !!!!

நகைக்க சில காமடி துணுக்குகள் :)




உங்களுடைய பையனைக் கொஞ்சம் கண்டிச்சு வையுங்க சார்!’’

‘’ஏன்?’’

இந்தியாவின் தேசிய பறவை எதுன்னா ‘கொசு’ என்கிறானே?’’
>குலசை நஜ்முதீன்

***************************************************************

‘’எப்பலேர்ந்து உங்களுக்கும்,உங்க மனைவிக்கும்
கருத்து வேறுபாடு ஆரம்பிச்சது…?’’

‘’கல்யாணத்திலேர்ந்து…வக்கீல் சார்!’’
>ஆனந்த சீனுவாசன்

****************************************************************

‘’நம்ம தலைவரோட நாய்க்கு மோப்ப சக்தி அதிகம்!’’

‘’அப்படியா!’’

‘’ஆமாம்.லஞ்சம் கொடுக்க வர்றவங்களை கண்டு பிடிச்சி
வாலாட்டுமே!’’
>திருத்துறைப்பூண்டி சேகர்

****************************************************************

‘’பெனசில்ல ஆட்டோகிராப் போடணும்னு சொல்றிங்களே …ஏன்?’’

‘உங்க புகழ் மங்கும்போது அழிச்சுக்கலாம் பாருங்க!’’
ஜே.தனலட்சுமி

**********************************************************

நன்றி கல்கி 08-02-09

*****************************************************************************

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு, கொய்யால சிம்பு படத்த பாத்தா அப்பவே சாவு

-'பொல்லாதவன்' சங்கம்
----------------------------------------------

நிருபர்: நீ நடிக்க வரலேன்னா என்னவாயிருப்பீங்க?

விஜய்: ஐ ஏ ஸ் ஆகிருப்பேன்.

நிருபர்: அதான் நடிக்க தான் வரலேயே, ஏன் இன்னும் ஐ ஏ ஸ் ஆகாம இருக்கீங்க?

--------------------------------------------

வடிவேலுவின் தங்கச்சி:ஏன் அண்ணா சோகமா இருக்கீங்க?

வடிவேலு: வரும்போது ஒரு நாதாரி பய குருவி பட டிக்கேட் ஓசில தந்தான். சரினு போனா போகுதுனு மூனு மணி நேரம் தெனர தெனர பாத்தேன்.. அதான்

தங்கச்சி: ஓடி வந்துருக்கலாமே?

வடிவேலு:படம் பாக்கும்போது ஒருத்தன் சொன்னா இவன் 'விஜய்' படம் பாக்க வந்துருக்கான் இவன் ரொம்ப 'தைரியசாலி'னு சொல்லிட்டாமா!!... நானும் எவ்வளவு நேரம் தான் படம் பாக்குற மாதிரியே நடிக்குறது?

**********************************************

காமடி சிரிப்புகள்




நகைச்சுவை 4.டாக்டர்- உங்க வயற்றில எப்படி இவ்வளவு தீப்புண் ஏற்பட்டது
நோயாளி- பையன் +2 ல நல்ல மார்க் வாங்கணுமேன்னு..இவ்வளவு நாள் வயத்தில நெருப்பை கட்டிக்கிட்டு இருந்தேன்

******************************************************

'அந்த மேஜை ரொம்ப வெட்கப்படுது ??.'

'ஏன்'

'அதுக்கு டிராயர் இல்லையே '

****************************************************

பாமா : பல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும்.

ராமு : சொத்தையோட போகணும்

--------------------------------------------------------------------------------

வீட்டோட வேலைக்காரி கிடைப்பாளா?

சின்ன வீட்டோடயா? பெரிய வீட்டோடயா எசமான்

*********************************************************************

உமா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்
பாமா : எதை வைத்து?
உமா : பேனாவை வைத்து தான் எழுதினேன்!

--------------------------------------------------------------------------------

ஜோவும், நண்பரும் காபி ஷாப் சென்றிருந்தனர்.
நண்பர் : “காபி ஆறதுக்குள்ள குடிச்சுடு.”
ஜோ : “சூடான காபி (Hot coffee) 5 ரூபா, ஆறிய காபி (Cold coffee) 10 ரூபானு போட்டுருக்காங்க இல்ல, அதனாலதானே!.”

*******************************************************************************

நண்பர் : “என்ன பண்ணிட்டிருக்க ஜோ?”
ஜோ : “எங்க அப்பாவுக்கு லெட்டர் எழுதிக்கிட்டு இருக்கேன்”
நண்பர் : “அதுக்கு ஏன் இவ்வளவு மெதுவா எழுதற?”
ஜோ : “அவரால வேகமாக படிக்க முடியாது. அதனால்தான் மெதுவா எழுதறேன்”

***************************************************************************************

விஜய் : கொக்கு ஏன் ஒத்தக்கால்லே நிக்குது?

அஜய் : இன்னொரு காலைத் தூக்கினால் கீழே விழுந்துடுமே அதுதான்.

-------------------------------------------------------------------------------

ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார்.

பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார்.

ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான்,
ஐயா.

***************************************************************************************************

ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.
பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.
ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!
--------------------------------------------------------------------------------

கரண் : கழுதைக்குப் பிடித்த ரொட்டி எது?
கிரண் : தெரியலியே?
கரண் : சுவரொட்டி - தான்.
கிரண் : ?????????
*****************************************************

"எல்லாரும் பேசி முடிச்சாச்சு.... தலைவர் எதுக்கு இன்னமும் வெயிட்
பண்றார்?"

"அவர் கணக்குபடி இன்னும் ரெண்டு பொன்னாடை வரணுமாம்!"

***************************************************************************************

ஏன் ஸ்கூட்டரை திருடினே...?"

"டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு வண்டிய எடுன்னு
அவசரப்படுத்தினாரு எசமான்..!"

**********************************************************************

ஜொள்ளு 50%; லொள்ளு 50%

உன்னைப் பார்த்து ஒரு அழகான பொண்ணு சிரிச்சா என்னடா அர்த்தம்?

தெரியலியே!

உனக்குப் பின்னாடி நான் நிற்கிறேன்னு அர்த்தம்.

காமடி கண்ணா காமடி





'அந்த மேஜை ரொம்ப வெட்கப்படுது ??.'

'ஏன்'

'அதுக்கு டிராயர் இல்லையே '

****************************************************

பாமா : பல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும்.

ராமு : சொத்தையோட போகணும்

--------------------------------------------------------------------------------

உமா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்

பாமா : எதை வைத்து?

உமா : பேனாவை வைத்து தான் எழுதினேன்!

--------------------------------------------------------------------------------

விஜய் : கொக்கு ஏன் ஒத்தக்கால்லே நிக்குது?

அஜய் : இன்னொரு காலைத் தூக்கினால் கீழே விழுந்துடுமே அதுதான்.

-------------------------------------------------------------------------------

ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.

பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.

ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!

--------------------------------------------------------------------------------

கரண் : கழுதைக்குப் பிடித்த ரொட்டி எது?

கிரண் : தெரியலியே?

கரண் : சுவரொட்டி - தான்.

கிரண் : ?????????

*****************************************************

12.29.2009

கலக்கல் காமடி (கொஞ்சமாச்சும் சிரிங்க )

காமடிங்கோஓஓஓ




காதலன்: ஆபரேஷன்ல நான் இறந்துட்டா இந்த டாக்டரையே நீ கல்யாணம்
பண்ணிக்கணும். எனக்காக செய்வியா?
காதலி: ஏன் இப்படி பேசறீங்க?
காதலன்: வேற எப்படி அந்த டாக்டர பழிவாங்கறது?

------

நபர்: பஸ் ஸ்டாண்ட் போகணும். எவ்வளவு ஆகும்?
ஆட்டோ டிரைவர்: 20 ரூபா ஆகும்
நபர்: 5 ரூபாய்க்கு வரீங்களா?
ஆட்டோ டிரைவர்: 5 ரூபாய்க்கு யார் வருவாங்க?
நபர்: பின்னாடி உட்காருங்க. நான் உங்கள கூட்டிகிட்டு போறேன்.

-----------
மனைவி: டாக்டர் ஒரு மாதம் நல்ல மலைப் பகுதியான இடத்துக்குப் போய்
ஓய்வெடுக்க சொல்றார். நாம எங்க போகலாம்?
கணவன்: வேற டாக்டர்கிட்ட போகலாம்

------
போலீஸ்: சாகறதுக்கு முன்னாடி கடைசி ஆசை ஏதாவது இருந்தா சொல்லு
கைதி: என்னை தலைகீழா தூக்குல போடணும்

-------

வங்கி மேலாளர்: நீங்க காருக்காக லோன் வாங்கியிருந்தீங்க. மாசம் தவணை
கட்டாததால நாங்க கார் எடுத்துக்கிட்டு போகிறோம்.
நபர்: இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா என்னோட கல்யாணத்துக்கும்
லோன் வாங்கியிருப்பேனே!!


காதலன் : ஏன் அவசரப்படற வீட்டுக்கு போகணும்னு, ஏன் வீட்ல அப்பா அம்மா வந்துருவாங்களா?

காதலி : இல்ல டியர்! என்னோட குழந்தைங்க ஸ்கூல் விட்டு வந்துரும் அதான்!

******

ராமு : என் பையன் வாங்கியிருக்கிற 98% மார்க்கைப் பார்த்தா மெடிக்கல் கிடைக்குமுனு தோணுது...!

சோமு : கவலையே படாதீங்க, கண்டிப்பா கிடைக்கும்ண்ணே!

ராமு : இப்ப ஒண்ணாவதுல வாங்கியிக்கிற மார்க்கை தொடர்ந்து வாங்கனுமேனுதான் கவலையா இருக்கு...!

******

ராமு : இந்த ஆபீஸ்ல `உங்களுக்கு பணி செய்ய எங்களுக்கு உதவுங்கள்'னு எழுதி வச்சிருக்காங்களே, அதுக்கு என்ன அர்த்தம்?

சோமு : வேறென்ன...! லஞ்சம் கொடுங்கன்னு தான் இப்பிடி கேக்குறாய்ங்க!

******

சோமு : உங்களுக்கு ஜாலியன் வாலாபாக்கு பற்றித் தெரியுமா?

ராமு : நான் கொக்குப் பாக்கு, ரோஜா பாக்கு, நிஜாம் பாக்கு, ஏன் கொட்டைப் பாக்குக் கூட போட்டு இருக்கேன்,
இந்த வாலாபாக்கு மட்டும் போட்டதில்லைப்பா....

******

நீ திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த ?

அது திருட்டு ரயிலா என்னன்ற விபரமெல்லாம் நீங்க ரயில்வே டிபார்ட்மெண்டைத்தான் சார் கேட்கணும்.

******

ராமு : ஏம்பா நான் அனுப்பிச்ச மெயில் கிடைச்சுதா?

சோமு : இல்லை கிடைக்கலையே!

ராமு : ஏம்பா கிடைக்கலேனா எனக்கு சொல்லுன்னு அதே மெயில்லயே எழுதியிருந்தேனேப்பா!

******

ஏண்டா தம்பி உங்கப்பா உன்னைப் போட்டு இந்த அடி அடிக்கிறாரு நீ அழவே இல்லையே?

ஒண்ணும் பிரயோஜனம் இல்லீங்க. எங்கப்பாவுக்குக் காதே கேக்காதுங்க.

******


இன்றைய மெகா ஜோக்:



கணவன் : ஏண்டி அப்படி என்ன தலைபோற அவசரம்னு ஆட்டோ பிடிச்சு ஆபீசுக்கே வந்திருக்கிறே?

மனைவி : நம்ம வீட்டு வேலைக்காரியைக் காணோம். சந்தேகமாப் போச்சு. நீங்களாவது ஆபீசில இருக்கீங்களான்னு பார்க்கத்தான் வந்தேன்!

சிரி சிரி சிரி ........... !!!

அட சிரிக்க தெரிந்த மிருகத்துக்கு மனிதன் என்று பேர் தானே , அப்படின்னா நாங்க மனிதனா இருக்க விரும்பல நாங்க நாங்களாவே இருக்க விரும்புறோம் , இருந்தாலும் நாங்க சிரிக்க விரும்புறோம் , மனிதர்கள் தான் சிரிக்க மறந்திட்டாங்க ஆனா நாங்க அவங்க மறக்காம இருக்க நினைவு படுத்திட்டுக்கொண்டே இருக்கிறோம் ,

நீங்களாவது சிரிங்க , அட சிரிங்கப்பா சிரிப்பிங்களா ?


1.பாம்புனாலே படையே நடங்கும் ஆனா நாங்க உங்கள பயமுறுத்த படமெடுக்கள எங்கள உங்க கிட்ட இருந்து காப்பாத்திக்க தான் படமெடுக்கோம், அப்புறம் மனித பதருங்கங்கிட்ட(அது தான் உங்ககிட்ட இருந்து ) காப்பாத்திக்க தான் புதருக்குள்ள வாழ்கிறோம் , எப்படி நம்ம காமடி :) அட நானே சிரிக்கிறேன் நிங்களும் சிரிங்க




2. அட நாயே அப்படி'னு சிடு மூஞ்சிககாரங்களா பாத்து சொல்லுவிங்களா ? இனிமே மாத்திக்கோங்க நாங்களும் சிரிப்போம்ல


எப்படி நாங்களும் சிரிப்போம்ல , அவரு அது தாங்க என்னோட வீட்டுக்காரர் கடைக்கு அனுப்பிவச்சி இருக்கேன் நான் ரொம்ப அழகா இருக்கேன்னு சொல்லி சொன்னாங்க அது தான் என்னோட படம் வித விதமா எடுத்து ஃபேசன் சோவுக்கு போலாம்னு ஒரு யோசன நீங்க என்ன சொல்லுரிங்க ,



ஹா ஹா ஹா , நான் எதுக்கு சிரிக்கிறேன் அப்படின்னு தானே பாக்கிரிங்க , இந்த ப்ளோக் எழுதுறானே ஒருத்தன் அவன் நேத்து என்ன பார்த்து நீங்க ரொம்ப அழகா சிரிக்கிறிங்க’னு
ரொம்ப வெட்கப்பட்டுக்கிட்டே சொன்னான் அதுக்கு தான் விழுந்து விழுந்து சிரிக்கிறேன் ,அல்லலோ நான் சிரிக்கிறது அவன் வெட்கப்பட்டதுக்கு தான் நான் எப்பவுமே அழகுதானே :)



டேய் மானிடா எங்கள் இனத்தில் இருந்து போய் ரெண்டு காலால நடக்க ஆரம்பிச்சதும் எங்களையே நீ காமடி பண்ணிக்கிட்டு இருக்க ,இங்க பாரு நான் உன்ன காமடி பண்ணுரேன் :)





நாங்களும் சிரிப்போம்ல



ஹாய் செல்லம் , ஹி ஹி



ஹா ஹா , இந்த முயலு நேத்து ஒரு காமடி பண்ணிட்டு போயிட்டான் அதுக்கு தான் இன்னும் சிரிக்கிறேன் , அந்த காமடி என்னன்னு சொல்லனுமா அத இத எழுதுனவன் கிட்ட சொல்லிட்டேன் அவன் கிட்டையே கேட்டுக்கொள்ளுக்கள், நான் சிரிக்கனும் :)




ஹா ஹா ஹா இவங்கெல்லாம் சிரிக்கிறாங்கலாமாம் :-)

(வெளிய சொல்லிடாதிங்க பாஸீ , )



சரி இப்போதைக்கு சிரிச்சது போதும் , போங்க போங்க , இனிமே சிரிப்பெல்லாம் அடுத்த வருசம் தான் , இது தான் இந்த ஆண்டின் கடேசி பதிவு

வீ ஆர் சாரி 2009 ................ மிகவும் வருத்தங்களுடன் விடைபெருகிறோம்

12.28.2009

மருத்துவர் காமடி




"இன்னைக்கு உங்களுக்கு ஆபரேஷன்?"
"போங்க டாக்டர், இன்னைக்குதான் நர்ஸ் சிரிச்சு, சிரிச்சு பேசினாங்க. இப்படி சொல்லி என்னை கஷ்டப்படுத்துறீங்களே!"


டாக்டர் எனக்கு 3 மாதமா கடுமையான இருமல்"
"அப்படியா? சும்மாவா இருந்தீங்க."
"இல்ல டாக்டர் இருமிகிட்டேதான் இருந்தேன்."


"டாக்டர் இந்த ஆபரேஷன்ல நான் பிழைச்சிடுவேனா?"
"அது தெரியாது, ஆனா கடன் தொல்லையில இருந்து நான் பிழைச்சிடுவேன்!"


டாக்டர்: உடம்புக்கு ஆயிரம் வியாதி வரத்தான் செய்யும் அதுக்காக இப்படி பயந்தா எப்படி?
நோயாளி: நான் பயப்படறது நோய்க்கு இல்ல டாக்டர். உங்களுக்கு தான்.


என்ன டாக்டர் எனக்கு மூணு தடவை ஆபரேஷன் பண்ணிட்டீங்களா?"
"யோவ் மூணு தடவை மயக்க மருந்து கொடுத்தேன். கொடுத்த 5 நிமிஷத்துல எந்திரிச்சுகிட்டு இதே கேள்வியை கேட்டுக்கிட்டிருக்கே."



"அந்த டாக்டர் மத்தவங்களைத் திட்டும்போது அடிக்கடி 'எலும்பை' எண்ணிடுவேன்னு சொல்றாரே, ஏன் அப்படி?"
"அவர் எலும்பு நோய் நிபுணராச்சே அதான்!"


"டாக்டர், எனக்கு காலையிலேர்ந்து உடம்பெல்லாம் அரிக்குது!"
"எனக்கு காலையிலேர்ந்து கை அரிக்குது, அது உங்களாலே எனக்கு வருமானம் வர்றதுக்குத்தானா?"


"டாக்டர், நான் என்ன சாப்பிட்டாலும் என் உடம்பிலே ஒட்டமாட்டேங்குது!"
"அப்படியா! தினமும் ஒரு பாட்டில் கோந்து சாப்பிடுங்க உடம்பிலே ஒட்டும்!"

மருத்துவர் காமடி




"இன்னைக்கு உங்களுக்கு ஆபரேஷன்?"
"போங்க டாக்டர், இன்னைக்குதான் நர்ஸ் சிரிச்சு, சிரிச்சு பேசினாங்க. இப்படி சொல்லி என்னை கஷ்டப்படுத்துறீங்களே!"

*****************************************************************

டாக்டர் எனக்கு 3 மாதமா கடுமையான இருமல்"

"அப்படியா? சும்மாவா இருந்தீங்க."

"இல்ல டாக்டர் இருமிகிட்டேதான் இருந்தேன்."

*********************************************************************

"டாக்டர் இந்த ஆபரேஷன்ல நான் பிழைச்சிடுவேனா?"

"அது தெரியாது, ஆனா கடன் தொல்லையில இருந்து நான் பிழைச்சிடுவேன்!"

****************************************************************************


டாக்டர்: உடம்புக்கு ஆயிரம் வியாதி வரத்தான் செய்யும் அதுக்காக இப்படி பயந்தா எப்படி?

நோயாளி: நான் பயப்படறது நோய்க்கு இல்ல டாக்டர். உங்களுக்கு தான்.

****************************************************************************


என்ன டாக்டர் எனக்கு மூணு தடவை ஆபரேஷன் பண்ணிட்டீங்களா?"

"யோவ் மூணு தடவை மயக்க மருந்து கொடுத்தேன். கொடுத்த 5 நிமிஷத்துல எந்திரிச்சுகிட்டு இதே கேள்வியை கேட்டுக்கிட்டிருக்கே."

****************************************************************

"அந்த டாக்டர் மத்தவங்களைத் திட்டும்போது அடிக்கடி 'எலும்பை' எண்ணிடுவேன்னு சொல்றாரே, ஏன் அப்படி?"

"அவர் எலும்பு நோய் நிபுணராச்சே அதான்!"

*************************************************************************


"டாக்டர், எனக்கு காலையிலேர்ந்து உடம்பெல்லாம் அரிக்குது!"

"எனக்கு காலையிலேர்ந்து கை அரிக்குது, அது உங்களாலே எனக்கு வருமானம் வர்றதுக்குத்தானா?"

************************************************************************

"டாக்டர், நான் என்ன சாப்பிட்டாலும் என் உடம்பிலே ஒட்டமாட்டேங்குது!"

"அப்படியா! தினமும் ஒரு பாட்டில் கோந்து சாப்பிடுங்க உடம்பிலே ஒட்டும்!"

**************************************************************************

"என்னோட படம் தான் வசூல்ல ஃபஸ்ட்!

"நிஜமாவா.... நம்பவே முடியலியே?"

"அடடா! உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா நான் சொன்னது பொய்னு!"

மருத்துவர் காமடி


நோயாளி- டாக்டர், இந்த ஆபரேஷனுக்கு பிறகு நான் வயலின் வாசிக்க முடியுமா?

டாக்டர்- அதுக்கு என்ன தாராளமா வாசிக்கலாம்.

நோயாளி- ஆச்சரியமா இருக்கு எனக்கு வயலின் வாசிக்கவே தெரியாதே


நோயா‌ளி: தினமு‌ம் ஒரு ப‌ச்சை மு‌ட்டை சா‌‌ப்‌பிடனுமா... எ‌ன்னால முடியாது டா‌க்ட‌ர்.
டா‌‌க்ட‌ர்: ஏ‌ன் முடியாது?
நோயா‌ளி: ஏ‌ன்னா எ‌ங்க ‌வீ‌ட்டு கோ‌ழி வெ‌ள்ளை மு‌ட்டைதா‌ன் போடு‌ம்.


ஒருவ‌ர்: இரும‌ல்‌ன்னு சொ‌ல்‌லி‌க்‌கி‌ட்டு டா‌‌க்ட‌ர்‌கி‌ட்ட செ‌ன்‌றாயே அவ‌ர் எ‌ன்ன சொ‌ன்னா‌‌ர்?
ம‌ற்றவ‌ர்: இது இரும‌‌ல்தா‌ன்னு... அவரு‌ம் ஒ‌த்து‌க்‌கி‌ட்டா‌ர்.


"என்ன டாக்டர் மருந்துச் சீட்டில ஸ்டெதஸ்கோப்-1 சிரிஞ்சு 2-ன்னு எழுதியிருக்கீங்க?"
"அதெல்லாம் இல்லாம உனக்கு எப்படிப்பா பரிசோதனை செய்து ஊசி போட முடியும்? மொதல்ல அதையெல்லாம் வாங்கிட்டு வா!"


"டாக்டர் தலைவலிக்கு நல்ல மருந்து எழுதிக் கொடுங்க!"
"தலைவலியைப் போக்கத்தான் என்னால மருந்து தரமுடியும். தலைவலி வேணுமின்னா போய் டி.வி. பாருங்க."


ஒருவர்: எதுக்கு டாக்டர் உங்க கையையே நீங்க புடிச்சுப் பார்த்துட்டு இருக்கீங்க?
டாக்டர்: பேஷண்ட் யாரும் வரலே ‘டச்' விட்டுப் போயிடக் கூடாதில்ல அதான்!'


"ஏங்க, அதான் நர்ஸ் சொன்னாங்கல்ல, இது ஒரு சின்ன ஆபரேஷன் தான், பயப்பட வேண்டாம்னு, அப்புறம் ஏன் இப்படி நடுங்கறீங்க."
"அடி அசடு, நர்ஸ் சொன்னது நம்மகிட்ட இல்லடி, டாக்டர்கிட்ட

நான் தான் இப்படி ஜோக்குகளை MSN-லிருந்து காப்பி அடிச்சு போடுகிறேன்னு நினச்சேன். ஆனால், "கலக்க போறது , 'அசத்த போறது' இப்படி எல்லாவற்றிலும் இந்த ஜோக்குகள் வருகின்றனவே!!!...
ம்ம். சரிங்க..... சிரிங்க

நோயா‌ளி: டா‌‌க்ட‌ர் எதை‌ப் பா‌ர்‌த்தாலு‌ம் இர‌ண்டு இர‌ண்டாக தெ‌ரியுது.
டா‌க்ட‌ர்: அ‌ப்படியா அ‌ந்த சோபா‌‌வி‌ல் போ‌ய் உ‌ட்காரு‌‌ங்க கூ‌‌ப்‌பிடு‌கிறே‌ன்.
நோயா‌ளி: இர‌ண்டு சோபா இரு‌க்கே, எதுல உ‌ட்கார‌ட்டு‌ம் டா‌க்ட‌ர்.

"ஏண்டி, மாப்பிள்ளை பஸ் கண்டக்டரா இருந்தவர்னு எப்படிக் கண்டுபிடிச்சே?"
"மொய்ப் பணத்தையெல்லாம் விரல் இடுக்கிலே மடிச்சி மடிச்சி வச்சுக்கிறாரே!"

"குடி குடியைக் கெடுக்குமாடா?"
"நீ வாங்கிக் கொடுத்தா உன் குடி கெடும். நான் வாங்கிக் கொடுத்தா
என் குடி கெடும்!"

"நேற்று உங்க வீட்டுக்கு வந்த திருடனை எப்படி பிடித்தீர்கள்?"
"எதேச்சையாக என் மனைவி செஞ்சிருந்த மைசூர்பாகை அவன் மீது வீச அதனால் பலத்த அடிபட்டு விழுந்தான்!"

திருடன் 1: மாசக் கடைசியிலே திருடப் போனது ரொம்பவும் தப்பாய் போச்சு.
திருடன் 2: ஏன் ஒண்ணுமே கிடைக்கலியா?
திருடன் 1: அதில்லே, திருடப் போன வீட்டில் வீட்டுக்காரன் என்னைப் புடிச்சுக் கெஞ்சிக் கூத்தாடி இருபது ரூபாய் கடன் வாங்கிட்டுத்தான் விட்டான்.


சமையல்காரன்: நான் வேலையை விட்டு விலகிக் கொள்கிறேன் சார். உங்க மனைவியை சமாளிக்க முடியவில்லை!
அவர்: ஏன், மிகவும் கண்டிப்பாக இருக்கிறாளா?
சமையல்காரன்: நான் இங்கு வேலைதான் செய்கிறேன். எப்போது வேண்டுமானாலும் போய்விட முடியும் என்பதை மறந்துவிட்டார்.
உங்களை அதிகாரம் செய்வது போல செய்கிறாரே!

கடை‌க்கார‌ர்: ம‌ளிக‌ை கடை‌யில வேலை பா‌ர்‌‌த்தவனை மரு‌‌ந்து கடை‌யில வேலை‌க்கு வை‌த்தது ரொ‌ம்ப த‌ப்பா போ‌‌ச்சு.
ம‌ற்றவ‌ர்: ஏ‌ன் அ‌ப்படி சொ‌‌ல்‌‌றீ‌ங்க.
கடை‌க்கார‌ர்: எதை எடு‌க்க‌ச் சொ‌ன்னாலு‌ம் எ‌த்தனை ‌கிலோ வே‌ணு‌ம்னு கே‌ட்‌‌கிறா‌‌ன்.


மகேஷ்: ஒரு வாரமா `கழுத்து சுளுக்கு'னு அவதிப்பட்டாயே! இப்ப எப்படி சரியா போச்சு?
ரமேஷ்: பின் பக்கமிருந்த லேடி டைப்பிஸ்ட்டை முன் பக்கம் மாத்திட்டாங்க!

நன்றி. (MSN JOKES)

தொ‌‌ண்ட‌ர்: ந‌ம்ம தலைவ‌ர் ஏ‌ன் ‌திடீ‌ர்னு மரு‌த்துவமனை க‌ட்டுகிறா‌ர்.
ம‌ற்றவ‌ர்: அவரு‌க்கு டா‌‌க்ட‌ர் ப‌ட்ட‌ம் கொடு‌க்‌கிறா‌ங்களா‌ம்... அதா‌ன் தொ‌ழிலை ஆர‌ம்‌பி‌‌ச்சுடலா‌ம்னு பா‌ர்‌க்‌கிறாரு.