I am Not a Normal Person,கோல்ட்மாரி இங்க நான் போடும் நகைச்சுவைகள் சில பல இணையத்தில் இருந்து எடுத்தவை, அவர்களுக்கு என்னுடைய நன்றி
12.28.2009
மருத்துவர் காமடி
நோயாளி- டாக்டர், இந்த ஆபரேஷனுக்கு பிறகு நான் வயலின் வாசிக்க முடியுமா?
டாக்டர்- அதுக்கு என்ன தாராளமா வாசிக்கலாம்.
நோயாளி- ஆச்சரியமா இருக்கு எனக்கு வயலின் வாசிக்கவே தெரியாதே
நோயாளி: தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிடனுமா... என்னால முடியாது டாக்டர்.
டாக்டர்: ஏன் முடியாது?
நோயாளி: ஏன்னா எங்க வீட்டு கோழி வெள்ளை முட்டைதான் போடும்.
ஒருவர்: இருமல்ன்னு சொல்லிக்கிட்டு டாக்டர்கிட்ட சென்றாயே அவர் என்ன சொன்னார்?
மற்றவர்: இது இருமல்தான்னு... அவரும் ஒத்துக்கிட்டார்.
"என்ன டாக்டர் மருந்துச் சீட்டில ஸ்டெதஸ்கோப்-1 சிரிஞ்சு 2-ன்னு எழுதியிருக்கீங்க?"
"அதெல்லாம் இல்லாம உனக்கு எப்படிப்பா பரிசோதனை செய்து ஊசி போட முடியும்? மொதல்ல அதையெல்லாம் வாங்கிட்டு வா!"
"டாக்டர் தலைவலிக்கு நல்ல மருந்து எழுதிக் கொடுங்க!"
"தலைவலியைப் போக்கத்தான் என்னால மருந்து தரமுடியும். தலைவலி வேணுமின்னா போய் டி.வி. பாருங்க."
ஒருவர்: எதுக்கு டாக்டர் உங்க கையையே நீங்க புடிச்சுப் பார்த்துட்டு இருக்கீங்க?
டாக்டர்: பேஷண்ட் யாரும் வரலே ‘டச்' விட்டுப் போயிடக் கூடாதில்ல அதான்!'
"ஏங்க, அதான் நர்ஸ் சொன்னாங்கல்ல, இது ஒரு சின்ன ஆபரேஷன் தான், பயப்பட வேண்டாம்னு, அப்புறம் ஏன் இப்படி நடுங்கறீங்க."
"அடி அசடு, நர்ஸ் சொன்னது நம்மகிட்ட இல்லடி, டாக்டர்கிட்ட
நான் தான் இப்படி ஜோக்குகளை MSN-லிருந்து காப்பி அடிச்சு போடுகிறேன்னு நினச்சேன். ஆனால், "கலக்க போறது , 'அசத்த போறது' இப்படி எல்லாவற்றிலும் இந்த ஜோக்குகள் வருகின்றனவே!!!...
ம்ம். சரிங்க..... சிரிங்க
நோயாளி: டாக்டர் எதைப் பார்த்தாலும் இரண்டு இரண்டாக தெரியுது.
டாக்டர்: அப்படியா அந்த சோபாவில் போய் உட்காருங்க கூப்பிடுகிறேன்.
நோயாளி: இரண்டு சோபா இருக்கே, எதுல உட்காரட்டும் டாக்டர்.
"ஏண்டி, மாப்பிள்ளை பஸ் கண்டக்டரா இருந்தவர்னு எப்படிக் கண்டுபிடிச்சே?"
"மொய்ப் பணத்தையெல்லாம் விரல் இடுக்கிலே மடிச்சி மடிச்சி வச்சுக்கிறாரே!"
"குடி குடியைக் கெடுக்குமாடா?"
"நீ வாங்கிக் கொடுத்தா உன் குடி கெடும். நான் வாங்கிக் கொடுத்தா
என் குடி கெடும்!"
"நேற்று உங்க வீட்டுக்கு வந்த திருடனை எப்படி பிடித்தீர்கள்?"
"எதேச்சையாக என் மனைவி செஞ்சிருந்த மைசூர்பாகை அவன் மீது வீச அதனால் பலத்த அடிபட்டு விழுந்தான்!"
திருடன் 1: மாசக் கடைசியிலே திருடப் போனது ரொம்பவும் தப்பாய் போச்சு.
திருடன் 2: ஏன் ஒண்ணுமே கிடைக்கலியா?
திருடன் 1: அதில்லே, திருடப் போன வீட்டில் வீட்டுக்காரன் என்னைப் புடிச்சுக் கெஞ்சிக் கூத்தாடி இருபது ரூபாய் கடன் வாங்கிட்டுத்தான் விட்டான்.
சமையல்காரன்: நான் வேலையை விட்டு விலகிக் கொள்கிறேன் சார். உங்க மனைவியை சமாளிக்க முடியவில்லை!
அவர்: ஏன், மிகவும் கண்டிப்பாக இருக்கிறாளா?
சமையல்காரன்: நான் இங்கு வேலைதான் செய்கிறேன். எப்போது வேண்டுமானாலும் போய்விட முடியும் என்பதை மறந்துவிட்டார்.
உங்களை அதிகாரம் செய்வது போல செய்கிறாரே!
கடைக்காரர்: மளிகை கடையில வேலை பார்த்தவனை மருந்து கடையில வேலைக்கு வைத்தது ரொம்ப தப்பா போச்சு.
மற்றவர்: ஏன் அப்படி சொல்றீங்க.
கடைக்காரர்: எதை எடுக்கச் சொன்னாலும் எத்தனை கிலோ வேணும்னு கேட்கிறான்.
மகேஷ்: ஒரு வாரமா `கழுத்து சுளுக்கு'னு அவதிப்பட்டாயே! இப்ப எப்படி சரியா போச்சு?
ரமேஷ்: பின் பக்கமிருந்த லேடி டைப்பிஸ்ட்டை முன் பக்கம் மாத்திட்டாங்க!
நன்றி. (MSN JOKES)
தொண்டர்: நம்ம தலைவர் ஏன் திடீர்னு மருத்துவமனை கட்டுகிறார்.
மற்றவர்: அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறாங்களாம்... அதான் தொழிலை ஆரம்பிச்சுடலாம்னு பார்க்கிறாரு.
Εγγραφή σε:
Σχόλια ανάρτησης (Atom)
Δεν υπάρχουν σχόλια:
Δημοσίευση σχολίου