காமடிங்கோஓஓஓ
காதலன்: ஆபரேஷன்ல நான் இறந்துட்டா இந்த டாக்டரையே நீ கல்யாணம்
பண்ணிக்கணும். எனக்காக செய்வியா?
காதலி: ஏன் இப்படி பேசறீங்க?
காதலன்: வேற எப்படி அந்த டாக்டர பழிவாங்கறது?
------
நபர்: பஸ் ஸ்டாண்ட் போகணும். எவ்வளவு ஆகும்?
ஆட்டோ டிரைவர்: 20 ரூபா ஆகும்
நபர்: 5 ரூபாய்க்கு வரீங்களா?
ஆட்டோ டிரைவர்: 5 ரூபாய்க்கு யார் வருவாங்க?
நபர்: பின்னாடி உட்காருங்க. நான் உங்கள கூட்டிகிட்டு போறேன்.
-----------
மனைவி: டாக்டர் ஒரு மாதம் நல்ல மலைப் பகுதியான இடத்துக்குப் போய்
ஓய்வெடுக்க சொல்றார். நாம எங்க போகலாம்?
கணவன்: வேற டாக்டர்கிட்ட போகலாம்
------
போலீஸ்: சாகறதுக்கு முன்னாடி கடைசி ஆசை ஏதாவது இருந்தா சொல்லு
கைதி: என்னை தலைகீழா தூக்குல போடணும்
-------
வங்கி மேலாளர்: நீங்க காருக்காக லோன் வாங்கியிருந்தீங்க. மாசம் தவணை
கட்டாததால நாங்க கார் எடுத்துக்கிட்டு போகிறோம்.
நபர்: இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா என்னோட கல்யாணத்துக்கும்
லோன் வாங்கியிருப்பேனே!!
காதலன் : ஏன் அவசரப்படற வீட்டுக்கு போகணும்னு, ஏன் வீட்ல அப்பா அம்மா வந்துருவாங்களா?
காதலி : இல்ல டியர்! என்னோட குழந்தைங்க ஸ்கூல் விட்டு வந்துரும் அதான்!
******
ராமு : என் பையன் வாங்கியிருக்கிற 98% மார்க்கைப் பார்த்தா மெடிக்கல் கிடைக்குமுனு தோணுது...!
சோமு : கவலையே படாதீங்க, கண்டிப்பா கிடைக்கும்ண்ணே!
ராமு : இப்ப ஒண்ணாவதுல வாங்கியிக்கிற மார்க்கை தொடர்ந்து வாங்கனுமேனுதான் கவலையா இருக்கு...!
******
ராமு : இந்த ஆபீஸ்ல `உங்களுக்கு பணி செய்ய எங்களுக்கு உதவுங்கள்'னு எழுதி வச்சிருக்காங்களே, அதுக்கு என்ன அர்த்தம்?
சோமு : வேறென்ன...! லஞ்சம் கொடுங்கன்னு தான் இப்பிடி கேக்குறாய்ங்க!
******
சோமு : உங்களுக்கு ஜாலியன் வாலாபாக்கு பற்றித் தெரியுமா?
ராமு : நான் கொக்குப் பாக்கு, ரோஜா பாக்கு, நிஜாம் பாக்கு, ஏன் கொட்டைப் பாக்குக் கூட போட்டு இருக்கேன்,
இந்த வாலாபாக்கு மட்டும் போட்டதில்லைப்பா....
******
நீ திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த ?
அது திருட்டு ரயிலா என்னன்ற விபரமெல்லாம் நீங்க ரயில்வே டிபார்ட்மெண்டைத்தான் சார் கேட்கணும்.
******
ராமு : ஏம்பா நான் அனுப்பிச்ச மெயில் கிடைச்சுதா?
சோமு : இல்லை கிடைக்கலையே!
ராமு : ஏம்பா கிடைக்கலேனா எனக்கு சொல்லுன்னு அதே மெயில்லயே எழுதியிருந்தேனேப்பா!
******
ஏண்டா தம்பி உங்கப்பா உன்னைப் போட்டு இந்த அடி அடிக்கிறாரு நீ அழவே இல்லையே?
ஒண்ணும் பிரயோஜனம் இல்லீங்க. எங்கப்பாவுக்குக் காதே கேக்காதுங்க.
******
இன்றைய மெகா ஜோக்:
கணவன் : ஏண்டி அப்படி என்ன தலைபோற அவசரம்னு ஆட்டோ பிடிச்சு ஆபீசுக்கே வந்திருக்கிறே?
மனைவி : நம்ம வீட்டு வேலைக்காரியைக் காணோம். சந்தேகமாப் போச்சு. நீங்களாவது ஆபீசில இருக்கீங்களான்னு பார்க்கத்தான் வந்தேன்!
Δεν υπάρχουν σχόλια:
Δημοσίευση σχολίου