2.22.2011

எவண்டா மணி எனக்கு ஆர்டர் போடறது ?

பிடித்த காமடி சில :



போஸ்ட்மேன்னும் சர்தார்ஜியும் பேசிக்கொண்டது;

" சார்.......... உங்களுக்கு மணி ஆர்டர் போட்டிருங்காங்க..........."

" (பல்லை கடித்தபடி) எவன்டா அவன் மணி? எனக்கு ஆர்டர் போடறது ?


ஊருக்கு நல்லது பண்ண வசூலிப்பவரும் பணக்காரரும் பேசிக் கொண்டது;

" நம்ம ஊர்ல ஒரு நீச்சல் குளம் கட்டப் போறோம். உங்களால் முடிஞ்ச உதவியைச் செய்யணும்."

" சரி, பத்து குடம் தண்ணீர் தர்றேன்"


இரண்டு மாணவர்கள் பேசிக்கொண்டது;

" இரண்டு கழுதை சேர்ந்து கணக்குப் போட்டா எப்படி இருக்கும்? "

" தெரியலையே? "

" எங்கேயாவது உதைக்கும்! "


ஆசிரியரும் மாணவனும் பேசிக்கொண்டது;

" கணக்குப் பரீட்சைல எல்லாக் கேள்விக்கும் ஏணிப்படியை வரைஞ்சு வச்சிருக்கியே, ஏண்டா?

" கணக்குல ஸ்டெப்புக்குத்தான் மார்க்குன்னு நீங்கதானே சார் சொன்னீங்க!


ஒரு பையனும் பொண்ணும் பேசிக்கொண்டது;

" ஐ லவ் யூ! "

" ஐ டோன்ட் லவ் யூ! "

" நல்லா யோசிச்சு சொல்லு டியர் ! "

" கண்டிப்பா, ஐ டோன்ட் லவ் யூ! "

" ஓ. கே. வெயிட்டர்......... எனக்கு மட்டும் பில் போடு."

" ஏய்! ஏய்! ஐ லவ் யூடா! செல்லம்! "



இரண்டு சிறு வயது நண்பர்கள் பேசிக்கொண்டது;

" என் தம்பி ரொம்பவும் பயந்த சுபாவம். சூடா இட்லி கூட சாப்பிட மாட்டான்."

"ஏன்?"

" அதுல ஆவி இருக்குமே!



மன்னரும் சேகவனும் பேசிக்கொண்டது;

" மன்னா, எதிரி நாட்டு மன்னர் ஒலை அனுப்பியுள்ளார்."

" அரண்மனைக்கு நாம் ஏற்கனவே 'கான்கீரிட்' போட்டாச்சு. ஓலை வேண்டாம். திருப்பி அனுப்பிவிடும்!"



இது மினி பிட்டு :

இரு நண்பர்கள் பேசிக்கொண்டது;

உங்க வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தமா கேட்குதே....

அது வேற ஒண்ணும் இல்லீங்க........... என் ஒய்ஃப் பாத்திரத்தைத் தூக்கிப் போடுவா. என் மேல பட்ட அவ சிரிப்பா. படலைனா நான் சிரிப்பேன் .



கொசுறு தகவல்:

தலைப்ப கவர்ச்சியா வச்சாத்தான் மக்கள் படிக்கிறாங்க’னு குடிகார கொரங்கர் சொன்னதுக்காக அந்த தலைப்பே தவிர அதில் உள்குத்து வெளிகுத்து போன்ற எதுவும் இல்லே இல்லே :-)

3.27.2010

டைட்டானிக் காதலுங்கோஓஓஓ

டைட்டானிக் காதல் :

எல்லாரும் எல்லாரானாலும் எல்லாருமே எல்லாராக முடியாது !! அப்படின்னு ஒன்னு சொல்லுவாஙளே , அது இதுதானுங்கோஓஒ..

பாருங்க டைட்டானிக் மாதிரி என்னமா போஸ் கொடுத்தாங்க ,இப்ப பாருங்க இப்படி அடிபட்டு இருக்காங்க !





ஹி ஹிஹி

3.24.2010

காமடியாமாம்

காமடியாமாம்




நட’ ராஜா.. நீ ‘நட’ ராஜா

டாக்டர், என்னோட ஓவர் வெயிட்டைக் குறைக்க நான் என்ன செய்யணும்?

நீங்க ஒண்ணும் செய்யவேண்டியதில்ல… பெட்ரோல் ரேட்டை லிட்டருக்கு எழுபது ரூபாயா ஏத்திட்டாப் போதும்.

அந்தக் காலம்.. இந்தக் காலம்

குடும்பத்தை மறந்தவர்கள், சாப்பாட்டை மறந்தவர்கள், ஏன் சிரிப்பைக் கூடத் தொலைத்தவர்கள், எந்நேரமும் நிலைகுத்திய பார்வையுடன் இருப்பவர்கள்.. யார்?

சின்னக் குழந்தைக்குக் கூடத் தெரியுமே.. அது ரிஷிகள், முனிவர்கள் என்று.

அது அந்தக் காலம். இந்தக்காலம்.. அது சாப்ட்வேர் எஞ்சினியர்கள்!!


****


ஒரு குளத்துல 25 எறும்புகள் குளிச்சிக்கிட்டு இருந்துச்சாம். குளத்துல ‘டபக்’குன்னு ஒரு யானை குதிச்சதாம். குதிச்ச வேகத்துல 24 எறும்புகள் தெறிச்சு வெளியே வந்துடுச்சாம். ஒரு எறும்பு மட்டும் யானை தலைமேல ஏறிடுச்சாம். அப்போ 24 எறும்புகளும் கோரஸா கத்துச்சாம். என்ன கத்துச்சு?

கடைசி ஜோக்குக்கு அப்புறம் பாருங்க..


***

மனம் திறந்த பாராட்டு!

ஏங்க.. என்னுடைய சமையல் எப்படி இருக்கு? இப்படியே சமைச்சுப் போட்டா எனக்கு என்ன கிடைக்கும்?

சீக்கிரம் உனக்கு என்னோட எல்.ஐ.சி. பணம் கிடைக்கும்.

***

ஆளாளுக்கு ஒரு பிரச்சினைனா..இவருக்கு இப்படி!

ஒரு நாளாவது கரெக்டா 9 மணிக்கு ஆபிஸ் போலாம்னு பார்க்கிறேன்.. முடிய மாட்டேங்குதே!!

ஏன்.. என்ன பிரச்சினை?

எனக்கு இன்னும் வேலையே கிடைக்கலை. அதான் பிரச்சினை!!

***


இது தான் கடேசி ஜோக் :


உன்னைப் பார்த்து ஒரு அழகான பொண்ணு சிரிச்சா என்னடா அர்த்தம்?

தெரியலியே!

உனக்குப் பின்னாடி நான் நிற்கிறேன்னு அர்த்தம்.


***

முதல் ஜோக் தொடர்ச்சி….


“டேய் மாப்ளே, அவன அப்படியே தண்ணில போட்டு அமுக்கிப் பிடிடா மாப்ளே”


*********

அப்புறம் இது கட கட கட வென சிரிக்க :


எதுக்கு ஆட்டோவைக் கொண்டு வந்திருக்கே...? நான் கேட்கலியே...!"

"நல்லா குலுங்கி குலுங்கி சிரிக்கிற மாதிரி ஜோக் எழுதிட்டு வான்னு சொன்னீங்களே! இதை ஆட்டோவுலே போயிட்டேப் படிங்க... என் திறமை புரியும்!"



நன்றிங்க இணையம்

2.13.2010

கண்ண மூடிக்கிட்டு சில தத்துவங்கள்

கண்ண மூடிக்கிட்டு சில தத்துவங்கள்




நாம அடிச்சா அது மொட்டை,
அதுவா விழுந்த அது சொட்டை !

'dye" மண்டையில போடுறது,
'die' மண்டைய போடுறது...

தண்ணிக்குள்ள கப்பல் போன ஜாலி...
கப்பல்குள்ள தண்ணி போன காலி...

லவர்ஸ் டே அன்னிக்கி லவர்ஐ கிஸ் பண்ணலாம்..
ஆனா டீச்சேர்ஸ் டே அன்னிக்கி டீச்சரை கிஸ் பண்ண முடியுமா?

யானை மேல நாம உட்கார்ந்த சவாரி
யானை நம்ம மேல உட்கார்ந்த ஒப்பாரி !

காக்கா கா-கானு கத்தறதலா அதை காக்கா-னு கூப்பிடறோம் ..
ஆனா மாடு மா.. மானு கத்தறதலா அத மாமா-னு கூப்பிடமுடியுமா !

ரன்னிங் ரேய்சுல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும்,
பரிசு கைக்குத்தான் கிடைக்கும் !

க்ரீம் பிஸ்கட்ல க்ரீம் இருக்கும்
நாய் பிஸ்கட்ல நாய் இருக்குமா ?

சோடா பிரிட்ஜில் வச்ச கூல் சோடா ஆகும்,
அதுக்காக அதை வாஷிங் மிஷின்ல வச்ச வாஷிங் சோடா ஆகுமா !

பச்சை மொளகைல பச்சை இருக்கும்
ஆனா கொடமொளகள கொடை இருக்குமா ?

சௌத் இந்தியா-ல நார்த்தாங்கை கிடைக்கும்
ஆனா, நார்த் இந்தியா-ல சௌத்-தாங்கை கிடைக்குமா ?


தண்ணீர தண்ணின்னு சொல்லலாம்
பன்னீர பன்னின்னு சொல்ல முடியுமா ?

2.08.2010

சிரிப்பு ,சிரிப்பு

பாருங்க மக்கா எப்படியெல்லாம் வேலைக்கு கூட்டிட்டு போக வேண்டி இருக்குது :)



இது வேற்றுமை & ஒற்றுமை வயதானவர்களுக்கும் ,இளைஞர்களுக்கும் ஒரே அலுவலகத்தில் , (சும்மா தமாசுக்குதான் )


இன்னும் படங்கள் வந்துக்கிட்டு இருக்கும் ..

1.09.2010

தமிழ் நண்பர்கள் காமடி 2

தமிழ் நண்பர்கள் காமடி 2




அப்பாவும் மகளும் பேசிக்கிடுதாங்க

அப்பா மகி : பட்டு ஏன் இந்த கொசுவெல்லாம் அடிக்காம விட்டுக்கிட்டு இருக்க ? பாருஎவ்ளோ கொசு இருக்குன்னு ,

ரித்து : போப்பா அதெல்லாம் என்னோட ரத்தம் அது தான் அடிக்க மனசு வரல



************************************************************************
அப்பா மகி : பட்டு அந்த மரம், செடி ,கொடிகளுக்கு தண்ணி ஊத்துடா செல்லம் ,

ரித்து : நீங்க தானேப்பா சொன்னிங்க மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான்னு , நீங்க தானே மரம் வச்சிங்க அப்ப நீங்க தான் தண்ணி ஊத்தனும்

*****************************************************************************

பள்ளியில் வாத்தியும் மாணவியும் பேசிக்கிறாங்க :

வாத்தி : சட்டையில் பட்டன் பிஞ்சிருக்குதே தைக்க வேண்டியதுதானே

மாணவி கவி : சாரிங்க கொஞ்சம் அசட்டையா இருந்திட்டேன்

***********************************************************************************
பட்டாஸ் : மாப்ள அருணு ரயில் பயணங்கள் பத்தி எழுதிக்கிட்டு இருந்தானே என்னாச்சி ?

பாஸ் : அதெல்லாம் மலையேறி போச்சி !

*********************************************************************

மாஸ்க் : அவரு காது டாக்டர் தானே , நீங்க எதுக்கு உங்க கண் பிரச்சனைய அவருக்கிட்ட சொல்லுறிங்க ?

அருண் : என்னோட கண்ணாடி காதுல சரியா நிக்க மாட்டுக்கே அதுதான்!

*****************************************************************************

தேனு : எனக்கு அந்த ஜிகர்தண்டா வாங்கி தர எதுக்கு ஊரு பூராம் சுத்தி கூட்டியாந்திங்க ?

மாஸ்க் : நல்லா வெயிலில் சுத்திட்டு vanthaaththaan ஜிகர்தண்டா குடிக்க நல்லா இருக்கும்

*******************************************************************************

மீசைக்கார் : (ரொம்ப டெர்ரா முகத்த வச்சிக்கிட்டு ) என்னோட சோப்பை ஏன் நாயிக்கு போடுற ,

அக்கா : உங்களுக்கு என்ன தொற்றுநோயா நாயிக்கு பரவிடும்ன்னு இப்படி பயப்புடுறிங்க

************************************************************************

சென்ஸஸ் எடுக்குமிட்த்தில் :

பிட்டுக்கார் : போன வருசம் நான் சென்சஸ் எடுக்கும் போது உங்க வயது 23ன்னு சொன்னிங்க , இப்போ 18னு சொல்லுறிங்களே !?

லலி : போன தடவ நான் சைடு ஆக்டரஸ் , இப்ப நான் கதாநாயகியாச்சே

****************************************************************************

ஆசிரமத்தில் :

கோல்ட் : குருவே பெண்ணாசை அறவே ஒழிய தாங்கள் அருள் புரிய வேண்டும்

சார்லஸ் : பின்ன எதுக்கு இந்த ஆசிரமத்துக்கு வந்தாய் சிஷ்யா ?

********************************************************************

நீதிமன்றத்தில் :

கப்பல் கார்த்திக் : ஏன் பகலில் திருடுனே ?

சதிஸ் : தொழிலுக்கு வந்த பின் ராத்திரி பகல்னு பார்க்க கூடாதுன்னு என்னோட குரு சொல்லிருக்கார் , நான் 24/7 சர்விஸ் பண்ணுவேன் ஐயா

**************************************************************************

டாக்டர் சுபைர பார்த்து :

கோலம் : அவர் என்ன தேங்காய் வியாபாரி மகனா ?

பச்ச : ஏன் மச்சி ?

கோலம் : வியாதி முத்தி போச்சான்னு பார்க்கிறதுக்கு , பேஷண்டை தூக்கு குலுக்கி பார்க்கிறாரே ...

****************************************************************************
அருண் பட்டாஸ் சேர்ந்து விளம்பர கம்பெனி ஆரம்பிச்சது பத்தி:

சதிஸ் ; பாஸ் என் அருணு ரொமப சேகமா இருக்கன் ?

மாஸ்க் : அதா விளம்பரக்கம்பெனி ஆரம்பிச்சாங்கள அதுக்கு விளம்பரம் சரியா வைக்கலையாமாமாம் ,
***************************************
***************************************

இமா : எங்க தலைவர் பாதுக்காக்க பட வேண்டிய பொக்கிஷம் ..

பிட்டுக்கார் : அதுதான் ஜெயிலுல வச்சு பூட்ட போறாங்களாம்

*****************************************************************************

1.08.2010

காமடிங்கோ நானே எழுதியது !!

ஹா ஹா ஹா காமடிங்கோ நானே எழுதியது தமிழ் நண்பர்களை வைத்து





ரெண்டு சம்பந்தகாரங்க பேசிக்கிடுதாங்க :

சம்-1 :சந்தோஷத்தைப் பணம் கொடுத்து வாங்க முடியாது ,

சம்-2 : ஆனா கஷ்ட்த்தை வாங்க முடியும் ,

சம்-1 :அப்படியா !

சம்-2 :ஆமாங்க ... நாங்க வரதட்சணை கொடுத்தோமே !


**********************************************************************


தேனு : சாதா தோசை ரவாதோசை .. சரி ! அதென்ன கூட்டணிதோசை-னு போர்டு வெச்சிருக்கிங்க ?

இட்லிக்கார் :அதுவா ! பழைய மாவு , புளிச்ச மாவு , மீந்துபோனது.. எல்லாத்தையும் கலந்து சுட்டதுதான் !


********************************************************************

ரெண்டு மாமியார் பேசிக்கிறாங்க :

லல் : மாப்பிள்ளை மெகாசீரியல்ல நடிக்கறார்..

மாஸ்க் : அப்ப பர்ம்னண்ட் வேலைல இருக்கார்னு சொல்லுங்க !

**************************************************************

சானே : சொந்த ஊரு எது ?

ரோபோ : அந்த அளவுக்கு நமக்கு வசதி இல்லீங்க, சொந்த வீடுதான் இருக்கு!


********************************************************************

தணி : முன்னே உங்க பையன் லா-காலேஜ் போறான்னு சொன்னீங்க, இப்ப மெடிக்கல் போறான்னு சொல்றிங்களே ?

ஓமப்பா :ஆமா முன்னே லா காலேஜ் பெண்கள் பின்னாடி சுத்தினவன் இப்ப மெடீக்கல் காலேஜ் பொண்ணுங்க பின்னாடி சுத்துறான் !

***********************************************

சித்தையா : என் மவனை ஏன் வெட்னரி டாக்டர் கிட்டே வைத்தியம் பண்ண கூட்டிப்போறே ?

மாமன்னர் ; நீங்கதானே சார் எம் மவன் வாயில்லா ஜீவன்னு சொன்னீங்க !


******************************************************


ஜாரி : என்னது பரீட்சைக்கு முதல் நாள்தான் தயார் பண்ணுவியா..! போதுமா அது ?

கவி : பிட் தயார் பண்றதை ஒரு வாரத்துக்கு முந்தியா செய்ய முடியும் ?


**************************************************

டாக்டர் வாத்தி :இது உங்கள் மகனின் உயிர் பிரச்சனை , கண்டிப்பா இந்த ஆப்ரேஷன் செய்தே ஆகனும்

தல : அதனாலதான் அவன் நேத்தே எங்கேயோ ஓடிட்டான் !!


**************************************************

மீசைக்கார் : அந்த நடிகை, இது என்னோட மானப்பிரச்சனை விடமாட்டேன்னு சொல்றாங்களே என்னாச்சி ?

பிட்டுக்கார் : படத்துல அவங்க குளிக்கிற ஸீனை சென்ஸார்ல கட் பண்ணிட்டாங்களாம்

*************************************************************

டாக்டர் பிரசாத்: ஆப்ரேசன்ல உங்க மாமியார் பிழைச்சிட்டாங்க .

வாணி :ஹீம். உங்களப்போய் கைராசி டாக்டர்ன்னு சொன்னாங்களே !!


************************************************

இட்லிக்கார் : என் மனைவி இட்லி பண்ணா மல்லிகைப்பூ மாதிரி இருக்கும்..

பச்ச : அப்படியா ?

இட்லிக்கார் : ஆமாம் , மீந்து போன இட்லிய தொடுத்து தலைல வெச்சிப்பாள்னா பாத்துக்கோங்க !


*********************************************

அனல் சகோ : டாக்டர் , நாலம் நம்பர் பேஷண்டுக்கு முன்னாடி ஆப்ரேஷன் பண்ணிட்டிங்க

டாக்டர் வாத்தி : இதுக்கு போய் ஏன் இவ்ளோ பதற்றப்படறே ?

அனல் சகோ : இல்ல டாக்டர் முதுகுல ஆப்ரேசன் பண்ணுறதுக்கு பதிலா முன்னாடி வயித்துல பண்ணிட்டிங்க !

**********************************************

டாக்டர் வாத்தி : தேள் கொட்டினதுக்கு இப்ப தானே மருந்து வாங்கிட்டு போனிங்க ,மறுபடியும் ஏன் கேக்குறிங்க ?

கோலம் : மருந்து கொட்டிருச்சி டாக்டர் !


******************************************

லல்லி : நான் என் கணவரும் வீட்டுவேலையப்பங்கு போட்டு செய்வோம் !

மல்லி : நிஜமாவா ?

லல்லி : ஆமாம் பத்துப்பாத்திரம் தேய்ச்சாக்கூட ஆளுக்கு ஐந்து தேய்ப்போம்

*************************************

நாயகன் : எப்படிடா உங்க மெட்ராஸ் டீரிப் , அத்தை வீட்டுல ஜமாய்ச்சிங்களா ?

மழைக்காதலன் : மண்ணாங்கட்டி ! எங்களை லாரில தண்ணி பிடிக்கவும் தெரு ப்ம்புல தண்ணியடிக்கவும் விட்டுட்டு நாள்பூரா அத்தையும் மாமாவும் ஊரு சுத்திட்டு வந்தாங்க

**********************************************

கோல்ட் : உங்க மூணாவது பையனுக்கு பொண்ணு பாக்குறிங்களாமே மருமகள் எப்படி இருக்கனும் ?

மாமன்னர் : என்னோட கூட்டணி அமைத்து என்னோட மூத்த மருமகள்களை வீட்டை விட்டு ஓரங்கட்டணும்...!

************************************

கார்த்திக் : தலைவர் வீட்டுல ஆயிரக்கணக்குல செருப்பு இருந்ததுக்கு அதிகாரிங்க கணக்கு கேட்டாங்களாமே .. தலைவர் என்ன சொன்னார் ?

வேல் : வாங்கினா கணக்கு காட்டலாம் , மேடைல வந்து விழுந்த்துக்கெல்லாம் எப்படி கணக்கு காட்டுறதாம்ன்னாராம் 


************************************

அப்புறம் ஒரு மெகா கடி :

இன்னைக்கு சமையல் குறிப்பு ரொம்ப இன்ரஸ்டிங்கா இருந்திச்சிங்க , நாளைக்கு உங்களுக்கு அதை சமைத்து தரபோறேன்

என்ன அது ?

ஸ்டவ்ல வெந்நீர் வைத்து அதுல ஹார்லிக்ஸ் கரைச்சு கொடுக்கப்போறேன்

***************************************************************************
இது தொடரும் .......................